தனது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டு கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தினால் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமோர் ஆவணத்தை கட்டாயம் எடுத்துச் செல்லுதல் வேண்டும். மேலும் தனக்கு அஞ்சல் மூலம் கிடைக்கப்பெறுகின்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை (Poll Card) எடுத்துச் செல்லல் வாக்காளருக்குப் போலவே வாக்களிப்பு நிலைய பணியாட்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் அதனையும் எடுத்துச் செல்லவும். மேலும் வாக்கினைப் பிரயோகிக்கும் போது பின்வரும் நடைமுறையைப் பின்பற்றவும்.
இங்கு வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் நால்வர் பின்வருமாறு செயற்படுவார்கள்.